Monday, January 26, 2009

மந்திரியை மாற்றிய பென்ஜிபாயின் மகன்.

ஒரு தடைவை நம்ம பென்ஜிபாய் தனது பையன் படிக்கும் பாடசாலைக்கு சென்றிருந்தார்.

அங்கே ஆசிரியர் ஒருவரிடம் பென்ஜிபாய் கேட்டார்' சார் எனக்கு ஒரு சந்தேகம்' என்று.

'என்னபென்ஜிபாய் சந்தேகமா? தாரளமாக கேளுங்கள்' என்றார் ஆசிரியர்.

பென்ஜிபாய் கேட்டார் ' ஜனாதிபதியை தவிர அமைச்சர்களை மாற்றுகின்ற உரிமை யாருக்கு சார் இருக்கு' அப்படியின்னு.

'ஓ.. அதுவா உங்க பையனுக்குத்தான்' என்றாராம் ஆசிரியர்.

'அப்படியா சார்' என்றாராம் நம்ம பென்ஜிபாய் சந்தோசமாக.

'ஆமா உங்க பையன்தானே எக்ஸ்சாமிலே இலங்கையின் பிரதம மந்திரியையே மாத்திட்டானே' என்றாராம் ஆசிரியர் ரொம்ப சோகமாக.

Friday, January 9, 2009

கடி ஜோக்

நம்ம பென்ஜிபாய் உடம்பு சரியில்லை என்று டொக்டர் கிட்ட போனார்.

'என்ன பென்ஜிபாய் உடம்புக்கு சரியில்லையா' என்றார் டொக்டர்.

'ஆமா டொக்டர் உடம்பு ரெம்ப வீக்கா இருக்கு' என்றார் நம்ம பென்ஜிபாய்.

'அப்படியா உடம்புக்கு என்ன ஆச்சு' என்றார் டொக்டர்.

'இல்லோ டொக்டர் .... முன்பெல்லாம் ஒரு அண்டா ரீயை சுலபமா தூக்கிக் குடித்து விடுவேன். ஆனால், இப்போ எல்லாம் சிங்கள் ரீயைத் தான் குடிக்க முடிகிறது' என்றார் நம்ம பென்ஜிபாய்.

Thursday, January 8, 2009

சொட்டுகிறது மனித ரத்தம்!


கொட்டுகிறது கொடிய யுத்தம் - தினம்
சொட்டுகிறது மனித ரத்தம்
தட்டுகிறான் உயிர்களை நித்தம் - இஸ்ரேல்
சூட்டுகிறான் தினம் 'ஹெலி' முத்தம்.


நடக்கிறது தினமும் இறப்பு - அந்த
உயிர்களுக்கு ஏது மறுபிறப்பு
தளிர்கிறது தன்மான உயிர்ப்பு - தினமும்
துளிர்க்கிறது பலஸ்தீன தளிர்ப்பு.


கொடுக்கிறான் ஆயுதம் வல்லரசன் - அதை
தடுத்திட யாருமில்லை மல் அரசன்
எடுக்கின்றான் உயிர்களை கல் அரசன் - அதை
தடுத்திட வருவோன் பூமியில் நல்லரசன்.

Monday, January 5, 2009

சுனாமியழித்த சினேகிதனுக்கு...!


எங்கிருக்கிறாய் எனதினிய நண்பனே?
கறுப்புஇவெள்ளை ஓவியங்களாய்க் காட்சிகள் மறைய நிலவின் சாட்சியாக நீ வாழ்ந்த ஊருக்கு நிவாரணப் பொருட்களோடு நாமனைவரும் நள்ளிரவில் வந்தடைந்தோம் !


உனது சுவடு பதித்த கடற்கரைஇ உனது சுவடு அழித்த கடல் அனைத்தையூம் பார்த்து விக்கித்து நின்றௌம் !


என்றாவதொருநாளில் என்னையூம் - உனதூருக்கு அழைத்துச் சென்றுஇ கடல் அழகு காட்டிஇ நடுநிசியில் - சுடச்சுட மீன் வறுத்த நிலாச்சோறுண்ணும் ஆசையை இறுதியாக என்னிடம் சொல்லிச் சென்றிருந்தாய் !


புன்னகை தவறிய முகங்களையூம்இ விரக்தி தேங்கிய கண்களையூம் பார்க்க நேரிட்டபோதெல்லாம் உன்னையூம் உயிருடன் சந்திக்க வேண்டுமென இதயம் - ஏங்கித் தவித்திற்று !


உனது இறுதி மூச்சை ஏந்திய காற்றுஇ உனது சுவாசப்பைகளை நிரப்பிய சமுத்திரம்இ உனது தேகத்தை விழுங்கியிருக்கும் பூமி அனைத்தும்இ
உனது ஞாபகங்களைத் திரட்டி என்னிடம் தந்தன !


கொடிய கனவொன்றினால் திடுக்கிட்டெழுதல் போல கொடியில் உலரும் உனதாடைகளைக் காண நேரிடும் கணங்களிலெல்லாம் நெஞ்சு நடுங்கிஇ விம்மித் தடுமாறுகின்றேன் உனது வெறுமையூணர்ந்து திகைத்து நிற்கின்றேன் !


உனது இறைவணக்கங்களும் நீ நோற்ற விரதங்களும்இ வாய்மொழிந்த திருமுறைகளும் ஓதிய ஒவ்வொரு வேதங்களும் நீ பற்றிக்கொள்ள பெரும் தூணாக அமைந்திருக்குமென உறுதியாக நம்புகிறேன் !


எனது அறையில் என்னுடன் வசித்த என்னினிய நண்பனே; தேவலோகத்தில் மறுபடியூம் கரம் கோர்ப்போம்இ நீண்ட நடை பயில்வோம் - அங்கே சுனாமி வராது !