Monday, January 5, 2009

சுனாமியழித்த சினேகிதனுக்கு...!


எங்கிருக்கிறாய் எனதினிய நண்பனே?
கறுப்புஇவெள்ளை ஓவியங்களாய்க் காட்சிகள் மறைய நிலவின் சாட்சியாக நீ வாழ்ந்த ஊருக்கு நிவாரணப் பொருட்களோடு நாமனைவரும் நள்ளிரவில் வந்தடைந்தோம் !


உனது சுவடு பதித்த கடற்கரைஇ உனது சுவடு அழித்த கடல் அனைத்தையூம் பார்த்து விக்கித்து நின்றௌம் !


என்றாவதொருநாளில் என்னையூம் - உனதூருக்கு அழைத்துச் சென்றுஇ கடல் அழகு காட்டிஇ நடுநிசியில் - சுடச்சுட மீன் வறுத்த நிலாச்சோறுண்ணும் ஆசையை இறுதியாக என்னிடம் சொல்லிச் சென்றிருந்தாய் !


புன்னகை தவறிய முகங்களையூம்இ விரக்தி தேங்கிய கண்களையூம் பார்க்க நேரிட்டபோதெல்லாம் உன்னையூம் உயிருடன் சந்திக்க வேண்டுமென இதயம் - ஏங்கித் தவித்திற்று !


உனது இறுதி மூச்சை ஏந்திய காற்றுஇ உனது சுவாசப்பைகளை நிரப்பிய சமுத்திரம்இ உனது தேகத்தை விழுங்கியிருக்கும் பூமி அனைத்தும்இ
உனது ஞாபகங்களைத் திரட்டி என்னிடம் தந்தன !


கொடிய கனவொன்றினால் திடுக்கிட்டெழுதல் போல கொடியில் உலரும் உனதாடைகளைக் காண நேரிடும் கணங்களிலெல்லாம் நெஞ்சு நடுங்கிஇ விம்மித் தடுமாறுகின்றேன் உனது வெறுமையூணர்ந்து திகைத்து நிற்கின்றேன் !


உனது இறைவணக்கங்களும் நீ நோற்ற விரதங்களும்இ வாய்மொழிந்த திருமுறைகளும் ஓதிய ஒவ்வொரு வேதங்களும் நீ பற்றிக்கொள்ள பெரும் தூணாக அமைந்திருக்குமென உறுதியாக நம்புகிறேன் !


எனது அறையில் என்னுடன் வசித்த என்னினிய நண்பனே; தேவலோகத்தில் மறுபடியூம் கரம் கோர்ப்போம்இ நீண்ட நடை பயில்வோம் - அங்கே சுனாமி வராது !

No comments: